ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருப்பூரில் பனியன், ஜட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் கோவல் சுவாமிநாதன் தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. சிவாஜிதேவ், பானு, ராஜேஷ் யாதவ் நடிக்கிறார்கள். மனீஷ் பாபு இயக்குகிறார். இந்தப் படம் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் மனீஷ்பாபு அளித்த விளக்கம்.
ஒரு புதுமுக தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் இணைந்து ஒரு உப்புமா படம் தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகச் சொல்லும் படம். சினிமாவில் உள்ள சில கசப்பான விஷயங்களை காமெடியாகச் சொல்கிறோம். மற்றபடி சினிமாவையே தனிப்பட்ட யாரையுமோ கிண்டல் செய்து எடுக்கவில்லை. இதில் பானு ஒரு நடிகையாகவே வருகிறார். பந்தா பண்ணும் நடிகைகளை அப்படியே பிரதிபலிப்பார். சினிமாவில் மட்டும் காமெடியில்லை. சினிமா தயாரிப்பதும் கமெடிதான். படம் பாருங்கள் அது தெரியும் என்கிறார். மனீஷ் பாபு.