விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணத்தை தழுவி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இந்தநிலையில் பிரபல இயக்குனரும் கலாபவன் மணியின் திரையுலக குருவுமான வினயன் 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கியுள்ளார்.
கலாபவன் மணிக்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த சில ரகசியங்களை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் வினயன். குறிப்பாக, கலாபவன் மணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு பிரபல நடிகையை தனது படத்தில் ஜோடியாக நடிக்க கேட்டதாகவும் அந்த நடிகை அவரது நிறத்தை காரணம் காட்டி அவரை ஒதுக்கியதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் பத்து வருட காலம் கடந்தபின், அந்த நடிகையுடன் நடிக்காவிட்டாலும், அந்த நடிகைக்கு மவுசு குறையத் தொடங்கிய நேரத்தில் அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தாராம் கலாபவன் மணி.
மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த அந்த நடிகை யார் என்கிற உண்மையை இந்தப்படத்தில் உடைத்துள்ளாராம் வினயன். இது தெரிய வரும்போது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகப்பெரிய அத்ரிசியாக இருக்கும் என்றும் கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார் வினயன்.