ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
கடந்த வாரம் மலையாளத்தில் ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடித்த புத்தன் பணம் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக இனியா நடித்துள்ளார்.. மம்முட்டிக்கு ஜோடியாக மனைவி கேரக்டரில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டரில் வேறு சிறிய நடிகை நடித்திருந்தார். இன்னும் சில காட்சிகளில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஷீலு ஆப்ரஹாம் என்பவர் நடித்திருந்தாலும், இவர்களை தாண்டி பிரதான ஹீரோயினாக இனியாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தப்படத்தில் கோழிக்கோட்டில் வசிக்கும் சுந்தரி என்கிற தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்திருந்தார் இனியா.. இந்தப்படத்தில் மம்முட்டியுடன் கூடவே வரும் கதாபாத்திரமான மம்முக்கோயா என்கிற காமெடி நடிகர் இனியா பற்றி ஒருவரிடம் விசாரிப்பார்.. அதற்கு அந்த நபர்.. “ஓ..அவளை கேட்கிறீர்களா.. அவள் தான் சுந்தரி.. தமிழத்தி..” என்பார்.. அதற்கு மம்முக்கோயா.. பார்த்தா சுந்தரி (அழகி) மாதிரி தெரியலையே.. ரொம்ப ஆவரேஜா தானே இருக்கா” என்று சொல்லி சிரிப்பார்.. இது இனியாவை மட்டம் தட்டுவதற்காக வைக்கப்பட்ட வசனமா இல்லை இனியா தமிழ்ப்பெண்ணாக நடித்ததால் அவரை கிண்டலடிப்பதற்காக வைக்கப்பட்ட வசனமா என்பதற்கு இயக்குனர் ரஞ்சித் தான் விளக்கம் சொல்லவேண்டும்..
ஆனால் அதேசமயம் இனியாவின் மகனாக வரும் எட்டாம் கிளாஸ் படிக்கும் பரதனை தனுஷின் தீவிர ரசிகனாக காட்டியிருப்பதிலும், படத்தில் 'மாரி' படத்தின் பாடலையும் பின்னணி இசையையும் ஆங்காங்கே உள்ளே நுழைத்திருப்பதிலும் தமிழ்ப்பெருமையும் பாடியுள்ளார் ரஞ்சித்.