ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வெள்ளியன்று கௌதம் கார்த்திக் நடிப்பில் 'ரங்கூன்' படம் வெளியானது.. இந்தப்படத்தில் குணசீலன் என்கிற சியா கேரக்டரில் சௌகார்பேட்டை சேட்டாக அற்புதமாக நடித்திருந்தார் மலையாள நடிகர் சித்திக். அதில் அப்பாவி முகத்தோற்றத்துடன் வந்து வில்லத்தனம் காட்டியவர், தற்போது அடப்பாவி என மலைக்க வைக்கும் விதமாக மொட்டத்தலையும் கட்டை மீசையுமாக புதிய ஆளாக வில்லத்தனம் காட்ட இருக்கிறார்..
இந்த கெட்டப் லால் ஜோஸ் டைரக்சனில் மோகன்லால் நடித்துவரும் வெளிப்பாடிண்டே புத்தகம் என்கிற படத்திற்காகத்தான். இதில் தரகன் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் சித்திக். மோகன்லால் கல்லூரியின் துணை முதல்வராக நடிக்கிறார். கல்லூரியில் மாணவர்களை மோகன்லாலுக்கு எதிராக தூண்டிவிட்டு அரசியல் பண்ணும் ஆளாக நடிக்கிறார் சித்திக். பல வருடங்களாக திரையுலகில் சமகாலத்தில் பயணித்தாலும் இப்போதுதான் மோகன்லால்-லால் ஜோஸ் முதன்முறையாக இணையும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.