ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமந்தாவும், நாகசைதன்யாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது அவர்கள் விவகாரத்திற்காக நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பேட்டியில் நாகசைதன்யா பதிலளித்திருந்தபோதும் சமந்தா மட்டும் இன்னமும் அமைதி காத்து வருகிறார்.
இந்தநிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்த்து வரும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. ஹாஷி- ஷாஷா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதாக தெரிவித்துள்ள சமந்தா, இத்தனை சீக்கிரம் இந்த இரண்டு நாய்களும் நன்றாக பழகி சேர்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதே எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். அதோடு, இந்த இரண்டு நாய்களுமே ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது புதிய விசயங்களை கற்றுக்கொடுத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.