ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புலிக்குத்தி பாண்டி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் டாணாக்காரன். இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது வெற்றிமாறனிடம் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய தமிழ் இயக்கி உள்ளார்.
விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு ஏராளமான படங்களில் நடித்து விட்டார். ஒரு சில படங்கள் திருப்தியை கொடுத்தது. ஆனால் பெரும்பாலான படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால் விக்ரம் பிரபு டாணாக்காரன் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்தார். கடும் வெயிலில் திறந்தவெளி மைதானத்தில் பல நாட்கள் வெறும் காலுடன் நடித்திருக்கிறார். 7 கிலோ வரை எடையை குறைத்தார்.
இது போலீஸ் கதைதான். அதாவது பயிற்சி போலீசின் கதை. அரசு கல்லூரிகளில் இருப்பது போன்றே போலீஸ் பயிற்சியிலும் ராக்கிங், ஜாதி மோதல், அதிகாரிகளின் அதிகாரபோக்கு என பல விஷயங்கள் இருக்கிறது. அதுபற்றி பேசுகிறது படம். அதிகார திமிர் பிடித்த லாலுக்கும், போலீசில் சேர்ந்து குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்ற துடிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இடையிலான மோதல்தான் கதை.
இந்தப் படம் விக்ரம் பிரபுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.