ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார். சில படங்களில் நடித்தும், படங்கள் தயாரித்தும் உள்ளார். சமீபத்தில் பா.ஜ., கட்சியில் இணைந்து, தேர்தல் சமயங்களில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ராம்குமார் வெளியிட்ட அறிக்கை : நடிகர் திலகத்தின் ஆசியுடனும், இறைவன் அருளுடனும் பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேன். என்னுடன் பிரச்சாரத்தில் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள், நண்பர்களுக்கு நன்றி. கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21 நடிகர் திலகத்தின் நினைவுதினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.