‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 96. பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் நீளம் கருதி இயக்குனர் பிரேம்குமார் சில காட்சிகளை நீக்கி இருந்தார். அந்த காட்சியை இப்போது வெளியிட்டுள்ளனர். அது யூ டியூப்பில் வைரலாக வருகிறது. அந்த காட்சி இதுதான்...
படத்தில் த்ரிஷாவின் பெயர் எஸ்.ஜானகி, பாடகி ஜானகியின் தீவிர ரசிகை. அவரது பாடல்களை மட்டுமே பாடக்கூடியவர். பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்ளும் த்ரிஷாவை, விஜய் சேதுபதி ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அது உண்மையிலே பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் வீடு. இவர்களைப் பார்த்ததும் எஸ்.ஜானகி அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பேசுகிறார்.
விஜய் சேதுபதி, "இவள் உங்களோட பெரிய பேன் உங்களை நேரில் பார்க்க அழைத்து வந்தேன். உங்க பாடல்களை மட்டும்தான் பாடுவா" என்று அறிமுகப்படுத்தி, பாடச் சொல்லுங்களேன்" என்கிறார்.
அப்போதும் த்ரிஷா "கோடையில் வாடாத கோவில் புறா, காமனை காணாமல் காணும் கனா..." என "பூ மாலையே தோள் சேரவா..." பாடலை பாடுகிறார். அந்த பாடலை எப்படி சரியாக பாட வேண்டும் என்பதை எஸ்.ஜானகி பாடிக் காட்டுகிறார். பின்பு த்ரிஷா பெயரும் எஸ்.ஜானகி என்பதை கேட்டு ஆச்சர்யமடைகிறார். "நல்ல பாடகி எல்லோருடைய பாடலையும் பாட வேண்டும். கல்யாணத்துக்கு பிறகும் பாடுறத நிறுத்திடாத" என்று கூறி வாழ்த்தி வழி அனுப்புகிறார். இந்த நான்கரை நிமிடக் காட்சியை பலரும் பார்த்து, ரசித்து வருகிறார்கள். இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.