ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக சமீபத்தில் வெளியான 'சண்டக்கோழி-2' எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை.
இந்நிலையில் சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து 'அயோக்யா' என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். 'லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட் மோகன் இயக்கி வருகிறார்.
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த ராஷிகண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் போன்ற இயக்குநர்கள் பங்குபெறும் காட்சிகள் தவிர, மற்ற காட்சிகள் படமாக்கப்படும்போது விஷாலே இயக்குநராக மாறிவிடுகிறாராம்.
அயோக்யா படத்துக்குப் பிறகு நடிக்க உள்ள படத்தை விஷாலே இயக்க இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக இந்தப்படத்திலேயே தன்னுடைய இயக்கத்தை சோதிக்கத் தொடங்கிவிட்டார்.