ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நகைச்சுவை நடிகராக கோலோச்சிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு தனக்குப் பின் விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் ஹீரோவாக ஜெயித்ததை பார்த்துவிட்டு, தானும் ஹீரோவாக நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால், அவர் நாயகனாக நடித்த சில படங்களே தற்போது நின்று போய்விட்டன.
எப்போதே வெளிவர வேண்டிய 'சர்வர் சுந்தரம்' பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'ஓடி ஓடி உழைக்கணும்', ஒரு கட்டத்தில் ஓடாமல் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்பமான 'மன்னவன் வந்தானடி' அப்படியே தடுமாறி நிற்கிறது. செல்வராகவன், சூர்யா நடிக்கும் 'என்ஜிகே' படத்தை இயக்கப் போய்விட்டார். இந்தப் படங்கள் தன்னை மீட்டெடுக்காது என்று நினைத்த சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போய்விட்டார். நேற்று அப்படத்தின் முதல் பார்வையும் வெளியானது.
அதோடு, நேற்று அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றையும் ஆரம்பித்துவிட்டார். நடித்து நின்று போயிருக்கும் படங்களுக்கு முன்பாக 'தில்லுக்கு துட்டு 2' படத்தை வெளியிடும் முயற்சியில் சந்தானம் இருக்கிறாராம். முதல் பாகத்தைப் போலவே இந்தப் படம் 'துட்டு' வசூல் செய்து தன்னைக் காப்பாற்றும் என நினைக்கிறாராம்.