ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி சிரீயல் ஒன்றில் நடித்த போது நடிகர் சண்முகராஜன், தன்னை பாலியல் ரீதியாக அணுகினார், மிரட்டினார், அடித்தார் என நடிகை ராணி போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சண்முகராஜனும் போலீசில் விளக்கம் அளித்தார். சில மணிநேரங்களில் இருவரும் சமாதானமாகினர். இருவரும் மன்னிப்பு கோரினர். ராணி புகாரை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் சண்முகராஜன், ராணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சண்முகராஜன், நடிகை ராணி தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி உள்ளார். கைகலப்பு நடந்த விவகாரத்தை பாலியல் புகார் என ராணி தவறாக தன் புகார் அளித்துள்ளார். சினிமாவில் இத்தனை ஆண்டுகளில் என் மீது இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டு வந்ததே இல்லை. என்னைப்பற்றி திரையுலகினர் அனைவருக்கும் தெரியும். தவறான குற்றச்சாட்டு சொன்ன ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் எனக்கு ரெட் கார்ட் கொடுக்கட்டும், இந்த சினிமாவை விட்டே விலக நான் தயார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.