ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் துல்கர்சல்மான், தற்போது பாலிவுட்டிலும் நுழைந்திருக்கிறார். இந்நிலையில் துல்கர்சல்மான் அளித்து ஒரு பேட்டியில், நான் சினிமா உலகில் எனது தந்தை மம்மூட்டியின் பெயரை ஒருபோதும் பயன்படுத்த நினைத்ததில்லை. அவர் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சபதம் எடுத்தபடிதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் சொந்த அடையாளத்தை உருவாக்கவே நான் விரும்புகிறேன். அதோடு, இப்போதும் எனது தந்தையுடன் அமர்ந்துதான் நான் நடிக்கும் படங்களை பார்க்கிறேன். என் நடிப்பை அவர் அரிதாகவே பாராட்டுகிறார். அதேசமயம், என் படங்களைப்பார்த்து விட்டு அவர் சிரித்துக்கொண்டே போனால், அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நான் கருதிக் கொள்கிறேன் என்கிறார் துல்கர் சல்மான்.