அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
மலையாள முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பில் இருந்தவர் நடிகர் மம்முட்டி. தசாவதாரம் உள்ளிட்ட சில விழாக்களிலும் கலைஞருடன் இணைந்து கலந்து கொண்டுள்ளார். கருணாநிதியின் மறைவை தொடர்ந்து தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ள மம்முட்டி, அதில் தமிழையும் தமிழ் மக்களையும் உயர்ந்து நிற்கவைத்த பெருமைக்கு சொந்தக்காரரான கலைஞரை இழந்துவிட்டோம் என தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
மேலும் மணிரத்னம் படத்தில் கருணாநிதியாக நடிப்பதற்கு தன்னை தேடிவந்த வாய்ப்பை சில காரணங்களால் ஏற்க முடியாமல் போனதையும் குறிப்பிட்டுள்ளார் மம்முட்டி. மணிரத்னம் தான் இயக்கிய இருவர் படத்தில் எம்.ஜி.ஆர்-, கருணாநிதி இருவரது அரசியல் வாழ்க்கையை படமாக எடுத்திருந்தார். இதில் எம்.ஜி.ஆராக மோகன்லால் நடிக்க, கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.
இதில் பிரகாஷ்ராஜூக்கு முன் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக அப்போது அழைக்கப்பட்டவர் மம்முட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் தற்போது மம்முட்டி குறிப்பிட்டுள்ளார்.