ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா, இந்திரஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தின் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனன் 'நரகாசூரன்' படத்தின் பெயரில் பல இடங்களில் பைனான்ஸ் வாங்கிவிட்டு அந்த தொகையை படத்துக்கு செலவு செய்யாததால் சிக்கல் எழுந்தது.
இதன் காரணமாக கவுதம் வாசுதேவ் மேனன் - கார்த்திக் நரேன் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் 'நரகாசூரன்' படத்தின் டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஹீரோ அரவிந்த்சாமி சம்பள பாக்கியை செட்டில் பண்ணாமல் டப்பிங் பேச மாட்டேன் என்று மறுத்துவிட்டார். தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, சமீபத்தில் நரகாசூரன் படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இதை அறிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நரகாசூரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் கார்த்திக் நரேன். அப்போஸ்டரில் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனனின் பெயர் இல்லை.
அதன் அர்த்தம்?
நரகாசூரன் படத்திலிருந்து கௌதம் வாசுதேவ் மேனன் விலகி கொண்டுவிட்டார். இதன் மூலம் அந்தப்படத்திற்கான தடை நீங்கிவிட்டது. அதே நேரம், நரகாசூரன் படத்தின் பெயரில் வாங்கிய அவர் வாங்கிய பைனான்ஸ் விவகாரங்கள் ரிலீஸ் நேரத்தில் தடையாக நிற்கும் என்கின்றனர் படத்துறையினர்.