ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷுக்கு, ஏற்கனவே படம் எடுத்ததில் கடன் ஏற்பட்டு, அவர் அதில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அதில் இருந்து மீள்வதற்காக, அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கொடுத்த யோசனைபடியே, ரஜினியை வைத்து, காலா படம் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்துக்காக, நடிகர் ரஜினி சம்பளம் எதுவும் பேசி வாங்கிக் கொள்ளவில்லை. ஆனாலும், படம் ரிலீசாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
காலா படம் முழுக்க முழுக்க நடிகர் தனுஷ் முயற்சியிலும், யோசனையிலும் எடுக்கப்பட்டதால், படத்தின் முடிவால் தனுஷ் மீது நடிகர் ரஜினி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காலா படம் சரியாகப் போகாதது, தன்னுடைய அரசியல் முயற்சிகளுக்கு சற்று பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக ரஜினி வருத்தப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.