ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். மேலும், பாகுபலிக்குப்பிறகு பிரபாசுடன் நடிக்க இந்திய அளவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கரும் பிரபாசுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஐதராபாத்துக்கு வந்த இவர் மீடியாக்களை சந்தித்தார் அப்போது, பிரபாஸ் என்னை கவர்ந்த நடிகர். அதனால் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறிய ஸ்வரா பாஸ்கர், நான் இந்தி படங்களில் நடித்து வந்தபோதும் எனது தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.