ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தில் தனிப் பெரும் நடிகையாக விளங்கியவர்களில் ஒருவர் நடிகை சாவித்ரி. அவரது வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்தை அனைவரும் வியக்கும் வகையில் படமாக்கி கடந்த வாரம் வெளியிட்டார்கள். வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பலரும் பாராட்டி வருகிறார்கள்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல், கதாபாத்திரங்களுக்கேற்ப பொருத்தமான நட்சத்திரங்களைத் தேர்வு செய்து யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார்கள் எனப் பாராட்டு கிடைத்து வருகிறது.
'மகாநதி' படத்தை நடிகர் பாலகிருஷ்ணாவும் அவருடைய குடும்பத்தினருடன் பார்த்துள்ளார். சாவித்ரியின் கதையை பிரமாதமாகப் படமாக்கிய படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் தயாரித்து, நடித்து வரும் அவருடைய அப்பா 'என்டிஆர்' வாழ்க்கை வரலாற்றுப் படமான 'என்டிஆர்' படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள். 'மகாநதி' படம் அளவிற்கு 'என்டிஆர்' படத்தை எடுக்கவில்லை என்றால் அது அவருடைய அப்பாவுக்கு செய்யும் அவமரியாதை என நினைத்திருக்கிறார். படத்தின் இயக்குனர் தேஜா விலகிய நிலையில் அவரே படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
'மகாநதி' படத்தில் உள்ள ஒவ்வொரு விஷயமும் கவனத்துடன் சொல்லப்பட்டுள்ளதால் அது போலவே தரமான படமாக 'என்டிஆர்' படம் உருவாக வேண்டும் என விரும்புகிறாராம். அதனால், படத்தை எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக எடுத்து வெளியிட அவர் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.