ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும் 11-ம் தேதி வெளியாக உள்ளது. சைபரை கிரைமை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை பிஎஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். படம் குறித்து சமந்தா கூறியதாவது...
இரும்புத்திரை கதை கேட்கும்போதே ஆச்சர்யமாக இருந்தது. நமக்கு தெரியாமல் இன்டர்நெட் மூலம் இவ்வளவு பிரச்னைகள் நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. கதையை கேட்ட பிறகு எனது செல்போனை தொடவே பயமாக இருந்தது. நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை இப்படம் பேசும்.
இந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர், இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.
இன்றைக்கு பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கு நாம் அடிமையாகி வருகிறோம். அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும், அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. விஷால், அர்ஜுன் இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.