ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே என ஆரம்பத்தில் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எம்.ராஜேஷ், அதன் பிறகு அழகுராஜா, சரவணனும் வாசுவும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு என மொக்கப்படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் வாய்ப்பின்றி இருந்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார்.
மாதங்கள் பல கடந்தும் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க சந்தானம் ஆர்வம் காட்டாமல் இழுத்தடித்திருக்கிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனைப் பார்த்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் ராஜேஷ். ராஜேஷின் நிலைமையை அறிந்து உடனே படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
சந்தானம் நடிப்பில் உருவாகவிருக்கும் படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் எம்.ராஜேஷ்.
இதனால் அதிருப்தியான சந்தானம், ராஜேஷ் படத்தை வேண்டாம் என நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையா என்று சம்பந்தப்பட்டவர்கள் தான் விளக்க வேண்டும்.