ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கபாலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை தராமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இழுத்தடிப்பதாக சினிமா விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித் செல்வகுமார் கூறியதாவது.... தென் ஆர்காடு மற்றும் புதுச்சேரி ஏரியாவில் கபாலி படத்தை திரையிட தாணுவிடம் ரூ.5.50 கோடி கொடுத்து உரிமையை பெற்றேன். ஆனால் படம் வெளியாகி ரூ.2.77 கோடி மட்டுமே வசூலை ஈட்டியது. இதனால் எனக்கு ரூ.2.73 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தாணுவிடம் கேட்டபோது ரூ.1.50 கோடி தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் 20 மாதங்களாகிவிட்டது, பணத்தை கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். இன்றைய சூழலில் அவர் பணத்தை தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.