சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்துள்ள புதிய படம் பாரத் அனே நேனு. இந்த படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் நா பேரு சூர்யா. இந்த படத்தையும் ஏப்ரல் 26-ந்தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால், மகேஷ்பாபு படத்தை ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது அல்லு அர்ஜூன் படத்தை ஒரு வாரத்திற்கு பிறகோ வெளியிடுமாறு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் என்ற இரண்டு நடிகர்களின் படங்களுமே ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுப்பதாக இல்லையாம். வேண்டுமானால் அவர்கள் படத்தை வேறு தேதியில் வெளியிட சொல்லுங்கள் என்று இரண்டு படக்குழுவினருமே விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்களாம்.
இருப்பினும், ஏதேனும் ஒரு படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் முயற்சியை தொடர்ந்து வருகிறார்கள்.