ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'பாகமதி'. இப்படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த ஒரே முகம் அனுஷ்கா மட்டுமே. படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களான ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் தெரியாத முகங்கள். இருந்தாலும் 'பாகமதி' படத்தை அனுஷ்காவை நம்பி மட்டுமே எடுத்தனர். அந்த நம்பிக்கையை ரசிகர்களும் வீணாக்கவில்லை.
பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படங்களான 'அஞ்ஞாதவாசி, ஜெய் சிம்ஹா' ஆகிய பெரிய படங்கள் வினியோகஸ்தர்களை ஏமாற்றிய நிலையில், அதன் பின் வெளிவந்த 'பாகமதி' படம் அவர்களுக்கு லாபம் தரும் படமாக அமையலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 25 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாம். பங்குத் தொகையாக மட்டும் சுமார் 15 கோடி கிடைத்துள்ளது என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட் மட்டும் 25 கோடி என சொல்லப்பட்டாலும் சுமார் 15 கோடியிலேயே இந்தப் படத்தை எடுத்து முடித்திருப்பார்கள். ஒரே ஒரு பாழடைந்த பங்களாதான் படத்தின் அதிகபட்ச செலவு, மற்றும் சில கிராபிக்ஸ் காட்சிகளுக்கான செலவுகள். அதனால் இந்தப் படம் இனிமேலும் வசூலிக்கும் தொகை படத்திற்கான லாபமாக மட்டுமே இருக்கும் என்கிறார்கள்.
அதே சமயம், தெலுங்கில் கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.