ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியத் திரையுலகில் அடுத்த பெரிய வெளியீடு என தெலுங்குத் திரைப்படமான 'அஞ்ஞாதவாசி' திரைப்படத்தைச் சொல்லலாம். கடந்த வருடம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மிகப் பெரும் வசூல் சாதனை படைத்தது.
அதற்கடுத்து தென்னிந்தியத் திரையுலகில் பெரிய வசூலைக் குவித்த படமாக தமிழ்ப் படமான 'மெர்சல்' படம் அமைந்தது. அந்தப் படம் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மூன்று வாரங்கள் கழித்தே வெளியானது.
ஆனால், 'அஞ்ஞாதவாசி' படம் தெலுங்கிலேயே தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் வெளியாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் சுமார் 40க்கும்மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 600 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாக உள்ளதாம். அது 'பாகுபலி 2' படத் தியேட்டர்களை விட அதிகம் என்கிறார்கள். ஆந்திரா, தெலுங்கானாவிலும் இப்படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைத்துள்ளது.
'பாகுபலி 2' படத்தின் பிரிமீயர் காட்சிகள் மூலம் கிடைத்த வசூல், முதல் நாள் வசூல் ஆகியவற்றை 'அஞ்ஞாதவாசி' படம் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.