ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார், தயாரித்து, இயக்கி உள்ள படம் மாயவன். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், அக்ஷ்ரா கவுடா, பகவதி பெருமாள், மைம் கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நலன் குமாரசாமி திரைக்கதை வசனம் எழுதியுள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 14-ந் தேதி படம் வெளிவருகிறது. 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இது. படம் தாமதமானது ஏன் என்பது குறித்து இயக்குனர் சி.வி. அளித்த விளக்கம் வருமாறு:
நான் தயாரித்த படங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி தான் வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்தின் தாமத்திற்கு முக்கிய காரணம், படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருக்கிறது. காரணம் இது ஒரு சயின்ஸ்பிக்சன் படம். கிராபிக்ஸ்க்கு மட்டும் கோடி கணக்கில் செலவு செய்திருக்கிறோம். தாமதத்திற்கு இரண்டாவது பெரிய காரணம் எனக்கும், ஒரு பைனான்சியருக்கும் (அன்பு செழியன்) ஏற்பட்ட பிரச்னை. இப்போது அனைத்தும் முடிந்து படம் வெளிவருகிறது.
இது ஒரு சயின்ஸ்பிக்ஷன் திரில்லர் படம். வில்லன் தொடர்ச்சியாக கொலை செய்து கொண்டே போவான். அதனை போலீஸ் டீம் துரத்தி கொண்டே போகும். எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்காது. கிடைக்க வரும்போது போலீசை போல படம் பார்க்கும் ஆடியன்சும் அதிர்ச்சி அடைவார்கள். படத்தின் இரண்டே பாடல்கள் தான் மற்றபடி படம் சேசிங்காக இருக்கும். என்றார் சி.வி.குமார்.