ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினி நடித்த லிங்கா படத்திற்கு பிறகு கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், இப்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய்சிம்ஹா என்ற படத்தை இயக்கி வருகிறார். பேமிலி சென்ட்டிமென்ட் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணாவுடன் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகு நயன்தாராவின் சென்ட்டிமென்ட் நடிப்புக்கு தெலுங்கில் ரசிகைகள் அதிகரித்து விட்டதால் இந்த படத்தில் அவருக்கு வெயிட்டான சென்ட்டிமென்ட் வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்காரணமாக ஹரிபிரியா, நடாஷாவை கவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இப்படம் வருகிற ஜனவரி 12-ந் தேதி ரிலீஸாகிறது.