ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை தேவயானியின் தம்பியான நகுல் நடித்த பல படங்கள் வரிசையாய் தோல்வியடைந்த நிலையில், பாலிவுட் நடிகை ஏஞ்சல், பிரகாஷ் ராஜ் உடன் நடித்து வரும் 'செய்' என்ற படத்தை தற்போது நம்பி இருக்கிறார். அறிமுக இயக்குனர் ராஜ் பாபு இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு உட்பட அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன.
செய் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். ஆனால் செய் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் செய் படத்தின் சென்னை சிட்டி உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே செய் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நவம்பர் 10 அல்லது 17-ஆம் தேதி 'செய்' படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் 'ட்ரிப்பி டர்டில் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னு என்பவர் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிக்ஸ் லோபஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.