ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு நான்காவது முறையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்தமுறை எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில், திலீப் நடிப்பில் உருவாகி, கடந்த சில மாதங்களாக ரிலீசாக காத்துக் கொண்டிருக்கும் அவரது 'ராம்லீலா' படத்தை வரும் செப்-28ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள்.
முதலில் தியேட்டர் அதிபர்கள், திலீப் படத்தை ரிலீஸ் செய்வதற்கே மிகுந்த தயக்கம் காட்டியதாகவும், அவர்களை ஒருவாறு அவர்களை சமரசம் செய்தே 'ராம் லீலா'வை ரிலீஸ் பண்ண சம்மதம் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் தோமிச்சன்.
தற்போது ஜாமீன் மனு நிரகாரிக்கப்பட்டுள்ள நிலையில், இனி ரிலீஸ் தேதியை மாற்ற தயாரிப்பாளர் விரும்பவில்லை. அதேசமயம் ரசிகர்கள் பலர் இப்போதும் திலீப் மீதான வெறுப்பில் இருந்தால் அவர்கள் மனதையும் கரைக்கும் விதமாக புதிய யுக்தியில் ராம்லீலா படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் திலீப் சிறையில் இருந்து அனுமதிபெற்று தனது தந்தையின் நினைவு நாள் காரியங்களில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த போஸ்டரை டிசைன் செய்துள்ளார்கள்.. இது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, திலீப்பின் அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ராதிகா சரத்குமார்.