ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிட் படங்கள் தருவதையே தனது தாரக மந்திரமாக கொண்டவர் மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத். ஓர் அறிமுக இயக்குனராக 2௦௦5ல் மம்முட்டியை வைத்து 'ராஜமாணிக்கம்', அதன்பின் மோகன்லாலை வைத்து சோட்டா மும்பை ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் துல்கர் சல்மானை வைத்து 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை இயக்கியவர், அதைத்தொடர்ந்து மலையாள ரசிகர்களை கிறங்கடித்த 'பெங்களூரு டேய்ஸ்' மற்றும் பிரமேம் ஆகிய படங்களை தயாரித்தார்.
தற்போது பஹத் பாசிலை வைத்து 'ட்ரான்ஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் அன்வர் ரஷீத். இந்தநிலையில் அடுத்ததாக அவர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் துல்கர் சல்மான் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஆனால் அன்வர் ரஷீத்தோ தனது தற்போதைய கவனம் எல்லாம் பஹத் பாசில் நடிக்கும் 'ட்ரான்ஸ்' படத்தில் தான் என்றும், அடுத்து துல்கர் படத்தை இயக்குவது உண்மைதான் என்றாலும் அதில் துல்கர் ஒன்றும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.