ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கும்கி' படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் குடும்பத்தின் வாரிசு விக்ரம் பிரபு, கடந்த சில படங்களாக வெற்றி கிடைக்காமல் திண்டாடி வருகிறார். அதன் பின் அவர் நடித்து வெளியான 'இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை' ஆகிய படங்கள் கொஞ்சும் சுமாரான வரவேற்பைப் பெற்றன. கடந்த இரண்டு வருடங்களாக விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த 'இது என்ன மாயம், வாகா, வீர சிவாஜி, சத்ரியன்' ஆகிய படங்கள் சுமார் வெற்றியைக் கூடப் பெற முடியாமல் படுதோல்வி அடைந்தன. இதனால், விக்ரம் பிரபுவுக்கு திரையுலகில் பெரிய சறுக்கல் ஏற்பட்டது.
அதனால், அவரே சொந்தமாக படத் தயாரிப்பில் இறங்கினார். அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் 'நெருப்புடா' படத்தைத் தயாரித்து நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நிக்கி கல்ரானி நாயகியாக நடித்துள்ளார். கடைசியாக வெளிவந்த நான்கு படங்களும் விக்ரம் பிரபுவின் நம்பிக்கையை குலைத்திருந்தாலும் 'நெருப்புடா' படத்தின் மீது அவர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார்.
நிக்கி கல்ரானி தற்போது தமிழில் ராசியான ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அதனால், அந்த ராசியும் சேர்ந்து 'நெருப்புடா' படத்தைக் காப்பாற்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தப் படம் வெற்றியடைந்தால் தான் விக்ரம் பிரபு தமிழில் நிலைத்திருக்க முடியும். அதனால், 'நெருப்புடா' தன்னை எப்டியும் காப்பாற்றும் என்ற பெரும் நம்பிக்கையில் உள்ளார் விக்ரம் பிரபு.