ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருவர் மட்டுமே நடித்துள்ள ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் ஒருவரே அனைத்து வேலைகளையும் செய்து தன்னந்தனியாக ஒரு படத்தை உருவாக்கி இருப்பது உலகத்திலேயே இதுதான் முதல்முறை. அதை செய்திருப்பவர் சங்ககிரி ராஜ்குமார்.
சில ஆண்டுளுக்கு முன்பு வெளிந்த வெங்காயம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் சங்ககிரி ராஜ்குமார். அவரின் அடுத்த படம் இது. படத்திற்கு ஆள் ஒன் என்று தலைப்பு வைத்திருக்கிறார். தயாரிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு உள்பட 24 துறைகளிலும் அவரே பணியாற்றி உள்ளார்.
அதுவல்லாமல், ஹீரோ, ஹீரோயின், வில்லன், ஹீரோவின் நண்பர்கள், வில்லனின் அடியாட்கள் எல்லாமே அவர்தான். இப்படியாக 40 கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு அரங்கில் 500 பேர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு காட்சியில் அந்த 500 பேரும் சங்ககிரி ராஜ்குமார்தான். இதுபற்றி அவர் கூறியதாது:
எளிதாக இருக்கும் என்று தான் இந்த முயற்சியில் இறங்கினேன். ஆனால் 3 வருடங்கள் ஆகிவிட்டது படத்தை முடிக்க, இடையில் மன அழுத்தம் ஏற்பட்டு இரண்டு முறை மருத்துவனையில் சேர்க்கப்பட்டேன். பாதியில் கைவிட்டு விடலாமா என்று கூட யோசித்தேன்.
இந்த படத்தை நான் மட்டுமே எடுத்தேன் என்பதற்கான மேக்கிங் வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறேன். இது சாதனைக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு தனிமனிதனாலும் ஒரு படத்தை எடுக்க முடியும் என்று காட்டத்தான். மற்றபடி இது பக்கா கமர்ஷியல் படம்.
நான்கு நண்பர்கள் காட்டு வழி பயணம் செய்கிறார்கள். வழி தவறி ஒரு புதிய இடத்துக்கு சென்று விடுகிறார்கள். அங்கு ஒரு பெரிய ஆய்வுகூடம் அமைத்து ஒரு விஞ்ஞானி உலகத்தை அழிக்க திட்டம்போடுகிறான். அதை இந்த நண்பர்கள் எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் கதை. கிராபிக்சும், சில ஏமாற்று வேலைகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறந்த பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என்கிறார் ராஜ்குமார்.