ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல ஓவியர் வீரசந்தானம். திரைப்பட நடிகராகவும் இருந்தார் 70 வயதான வீரசந்தானம். கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பத்திரிகைகளுக்கு ஒவியம் வரைவதுடன் சமுதாய பிரச்னைகள் மற்றும் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து ஓவியங்கள் வரைந்து அதனை கண்காட்சியாகவும் நடத்தினார். ஜல்லிகட்டு, நெடுவாசல் உள்ளிட்ட பல போரட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். பாலுமகேந்திரா இயக்கிய சந்தியாராகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான வீரசந்தானம், அவள் பெயர் தமிழரசி, கத்தி, பீட்சா, உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சந்தானம் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மறைந்த வீரசந்தானத்திற்கு சாந்தி என்ற மனைவி, சங்கீதா, சாலிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் இன்று நடக்கிறது.