ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா, விவாகரத்து கோரிய வழக்கில் ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது இளைய மகள் செளந்தர்யா. செளந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
செளந்தர்யா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். இருவரையும் சமாதானம் செய்ய இருவீட்டாரும் முயற்சித்து வந்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் செளந்தர்யா, விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்தார். அதேப்போன்று அஸ்வினும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக செளந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் இன்று நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை கொடுத்தனர். இருதரப்பு விளக்கத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீர்ப்பை ஜூலை 4-ம் தேதி வழங்குவதாக கூறி வழக்கை தள்ளி வைத்தது.