ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக அறிமுக ஹீரோக்கள் அது வாரிசு நடிகர்களாக இருந்தாலும் சரி, முட்டி மோதி சினிமாவில் வாய்ப்பு தேடிய நடிகராக இருந்தாலும் சரி, தங்களது அறிமுகப்படமே வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் அடுத்ததாக அந்த இயக்குனருடன் இன்னொரு படத்தில் இணைந்து பணியாற்றுவது என்பது ஆளாளுக்கு மாறுபடவே செய்கிறது. சிலர் முதல் ஹிட் கொடுத்ததுமே அடுத்த படத்திலும் இணைவார்கள். இன்னும் சிலர் நல்ல கதையும் அதற்கான நல்ல நேரமும் அமையட்டும் என காத்திருப்பார்கள்.
நடிகர் துல்கர் சல்மான் விஷயத்திலும் இதுதான் இப்போது நடந்துள்ளது. துல்கர் சல்மானின் அறிமுகப்படமான 'செகன்ட் ஷோ' வெற்றிப்படமாக அமைந்தது. மம்முட்டியின் மகனை நாம் அறிமுகப்படுத்துகிறோம், நம்மை நம்பி அவரை ஒப்படைத்திருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் படத்தை இயக்கி ஹிட்டாக்கினார் ஸ்ரீநாத் ராஜேந்திரன். இத்தனைக்கும் இவரும் அறிமுக இயக்குனர் தான், இந்த இடைப்பட்ட காலத்தில் துல்கர் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்ட நிலையில், ஸ்ரீநாத் ராஜேந்திரனோ, மோகன்லால், வைத்து 'கூதரா' என்கிற பிளாப் படத்தை மட்டுமே கொடுத்துள்ளார்.. இந்நிலையில் துல்கர் சல்மானை வைத்து இவர் மீண்டும் படம் இயக்குவது உறுதியாகியுள்ளது.. அதை துல்கர் சல்மானும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.