ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் இரட்டை எழுத்தாளர்களின் ஆதிக்கம் சில வருடங்களுக்கு முன் அதிகம் இருந்தது.. இப்போதும் அவர்களின் ஆதிக்கம் இருக்கிறதுதான் என்றாலும் இரட்டையர்கள் பெரும்பாலும் தனித்தனியாக பிரிந்து கதாசிரியராகவும் இயக்குனராகவும் தங்களது தனித்திறமைகளை காட்ட துவங்கிவிட்டனர். அப்படி இரட்டை இயக்குனர்களில் சாச்சி-சேது என்கிற இருவர் தனியாக பிரிந்தனர். இதில் சாச்சி கடந்த 2015ல் பிருத்விராஜை வைத்து அனார்கலி' என்கிற ஹிட் படத்தை கொடுத்துவிட்டார்..
இப்போது சேது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.. அதற்கேற்றாற்போல் அவருக்கு தனது படத்தை இயக்கி இயக்குனராகும் வாய்ப்பை கொடுத்துள்ளார் மெகாஸ்டார் மம்முட்டி. படத்தின் பெயர் 'கோழி தங்கச்சன்'. இதில் விசேஷம் என்னவென்றால் படத்தில் அவருக்கு உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார் மலையாள சினிமாவின் இளம் நடிகரான உன்னி முகுந்தன். இந்த சேது தான் உன்னி முகுந்தனுக்கு, இயக்குனர் வைசாக் மூலம் ஹிட் கொடுத்த 'மல்லு சிங்' படத்திற்கும் கதை எழுதியவர். அதேசமயம் நடிகர் தனுஷ் மலையாளத்தில் முதன்முறையாக தயாரிக்கும் படத்தில் தற்போது முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் இந்த உன்னி முகுந்தன்.