ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ரேணிகுண்டா, 18 வயசு' ஆகிய படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, தன்யா மற்றும் பலர் நடிக்கும் 'கருப்பன்' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்தப் படத்தில் மாடுபிடி வீரராக விஜய்சேதுபதி நடிக்கிறார். படத்திற்காக கிராமத்து முரட்டு இளைஞர்கள் வைப்பது போன்ற 'கிடா' மீசையுடன் தான் கடந்த சில மாதங்களாக விஜய் சேதுபதி இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துத்தான் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும் என 'கருப்பன்' படத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அனேகமாக படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துடன் விஜய் சேதுபதி இந்த வருடத்தில் ஆறேழு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.