ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு தெலுங்கில் எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. தமிழில் அவர் இயக்கி வெளிவரும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் தெலுங்கில் 'ஓகே பங்காரம்' படம் கூட நல்ல வசூலைப் பெற்றது.
ஆனால், நேற்று தமிழில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் தெலுங்கில் 'செலியா' என்ற பெயரில் வெளியானது. படத்திற்கான விமர்சனங்களும் வரவேற்பும் குறைவாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான திரைக்கதையம்சம் கொண்ட படங்கள் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்காது என்று தெரிவிக்கிறார்கள். தமிழில் வரவேற்பைப் பெற்ற பாடல்கள், தெலுங்கில் வரவேற்பை பெறாததும் படத்தின் மோசனமாக வரவேற்புக்குக் காரணமாக அமைந்துவிட்டன.
தமிழில் விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் இங்கு படம் தப்பித்துவிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம். அதே சமயம், தெலுங்கில் இப்படம் மோசமான தோல்வியைத் தழுவும் என்கிறார்கள்.
கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தாலும், அவரை ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அப்படி ஒரு கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை என்பது படத்திற்கு மைனஸ் பாயின்டாக் அமைந்துவிட்டது.