ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துல்கர் சல்மான் நடித்த ஒரு படத்தின் கதாசிரியருக்கு மூன்று வருட ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது என்கிற அதிர்ச்சியைவிட அவருக்கு எதற்காக அந்த தண்டனை கிடைத்துள்ளது என்பதுதான் பேரதிர்ச்சி தருவதாக இருக்கிறது.. கடந்த சில வருடங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடித்த நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி என்கிற படம் வெளியானது.. சமீர் தாஹிர் என்பவர் இயக்கிய இந்தப்படத்திற்கு ஹாசிர் முகமது என்பவர்தான் கதை எழுதி இருந்தார்.. இந்தப்படம் வெளியான சில நாட்களிலேயே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இவர்மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்..
கொச்சியில் தனது பக்கத்து பிளாட்டில் வசித்த பெண் ஒருவரை, போதை மருந்தை உட்கொண்ட ஹாசிர் முகமது பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்ததாம்.. கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் ஹாசிர் முகமதுவுக்கு தற்போது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.. இதில் அதிர்ச்சி என்னவென்றால் நீதிமன்ற விசாரணையின்போது, கடவுள் தனக்கு அளித்த செய்தியின்படிதான், உலகின் மிக மோசமான ஏழு பாவங்களில் ஒன்றான இந்த நடவடிக்கையை செய்ய துணிந்ததாக ஹாசிர் முகமது கூறியுள்ளாராம்.