ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சிங்கம்-3. இந்த படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து பின்னர் யு சான்றிதழுக்காக ரிவைசிங் கமிட்டிக்கு சென்றது. அதையடுத்து பல முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இந்த நிலையில், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கட்டாயமாக சிங்கம்-3 ரிலீசாகி விடும் என்று கூறப்பட்டது.
அதன்காரணமாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என மூன்று மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் அதிகப்படியான தியேட்டர்களில் அப்படத்தை வெளியிடும் முயற்சிகள் நடந்தன. இதையடுத்து பிரமோஷன் வேலைகளையும் சூர்யாவும், ஹரியும் தொடங்கினார்கள். ஆனால் இப்போது ஆந்திராவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஓடிக்கொண்டிருப்பதால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சிங்கம்-3 வெளியீடை பிப்ரவரி 3ந்தேதிக்கு மாற்றி விட்டனர்.
அதன்காரணமாக, ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி 2வது வாரத்தில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த கலையரசனின் அதே கண்கள் படத்தை இப்போது குடியரசு தினமான ஜனவரி 26-ந்தேதி அன்று வெளியிடுகிறார்கள். இந்த தகவலை அப்படத்தை தயாரித்துள்ள திருக்குமரன் எண்டர்டெய்ன் மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.