ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபுசாலமன் இயக்கிய 'கும்கி' படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தவர்தான் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி.. அதன்பின் 'எட்டுத்திக்கும் மதயானை' மற்றும் விஷாலின் 'கதகளி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த இவர், புகழ்பெற்ற மலையாள நடிகர் டி.ஜி.ரவியின் மகன் ஆவார்.. சில தினங்களுக்கு முன் பள்ளி மாணவிகளிடம் தனது நிர்வாண உடலை காட்டி அவர்களிடம் அத்து மீறியதாக நடிகர் ஸ்ரீஜித் ரவி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரித்துவந்த சிவில் போலீஸ் அதிகாரியான ராஜசேகரன் என்பவர் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான விசாரணைக்கும் ஆளாகியுள்ளார்..
நடிகர் மீது புகார் கொடுத்த பள்ளி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விசாரணையில் அவர் கடுமை காட்டி ஒருதலை பட்சமாக நடந்துகொண்டதாகவும், இவரது நடவடிக்கையால் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் காரணம் சொல்லபடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நேரடியாக கலெக்டரிடம் சென்று புகார் அளிக்க, அதன்பின்னர்தான் இந்த சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் இந்த அதிகாரி.. மேலும் இந்த வழக்கு பற்றி விசாரித்துவரும் போலீஸார், நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு போதைப்பழக்கம் உள்ளதா என்கிற ரீதியில் விசாரித்து வருகின்றன.