ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில வருடங்களாகவே தோல்விகளையே சந்தித்து வந்த மலையாள நடிகர் ஜெயராம், சமீபத்தில் தான் நடித்து திரைக்கு வந்த 'ஆடுபுலியாட்டம்' படத்தின் 100வது நாள் வெற்றியால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இனி தான் நடிக்கும் படங்களில் கதை நன்றாக இருந்தால் மட்டுமே தன்னால் இன்னும் சில வருடங்களுக்கு வெற்றிகரமாக காலம் தள்ள முடியும் என்பதையும் உணர்ந்திருபதால் அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கவனமாக தேர்வு செய்துவருகிறார்.
அந்தவகையில் அவர் 'காவல் மலாகா' (காவல் தேவதை) என்கிற படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு போலீஸ் யூனிபார்ம் அணிய இருக்கிறார். மலையாள சினிமாவில், ஏன் இந்திய சினிமா, உலக சினிமாக்களில் கூட யாரும் செய்யாத சாதனையாக தான் நடித்த 'ரகசிய போலீஸ்' என்கிற படத்தில் இரட்டை வேடங்களிலும் போலீஸ் ஆபீசராக நடித்து சாதனை படைத்தவர்.. அதனால் இன்ட காவல் மலாகா' படத்தை கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த போலீஸ் படமாக உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம் படத்தின் இயக்குனர் ஜெக்சன் ஆண்டனி.
ஜெயராமை நம்பி படம் தயாரிப்பதா என பலர் தயங்கிய வேளையில், அவர் மீது நம்பிக்கை வைத்து ஜெயராமின் முந்தைய படமான ஆடுபுலியாட்டம்' படத்தை தயாரித்த இரண்டு தயாரிப்பாளர்களே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.