ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெக்கானிக்கல் என்ஜீனீயராக இருந்து இயக்குனராகியிருக்கிறார் கார்த்திக் நரேன் என்ற 21 வயது இளைஞர். 'விழியின் சுவடுகள்', 'நிறங்கள் மூன்று', 'ஊமைக்குரல்', 'பிரதி' என நான்கு குறும்படங்கள் இயக்கி விட்டு 'துருவங்கள் பதினாரு' என்ற படத்தை இயக்கி உள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிசாய் இசையமைத்துள்ளார். 16 மணி நேரத்தில் நடக்கும் கதையில் 16 விதமான கேரக்டர்கள் இடம்பெறுகிறது. இந்த கேரக்டர்களை இணைக்கும் மைய கேரக்டராக ரகுமான் நடித்துள்ளார். இதுபற்றி கார்த்திக் நரேன் கூறியதாவது:
இந்தப்படத்தில் 16 பேர் பாத்திரங்களாக வருகிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக உணர வைப்பார்கள். அது மட்டுமல்ல படத்தின் கதை 16 மணி நேரத்தில் நடக்கிறது. எனவேதான் இப்பெயரை வைத்தோம். ரகுமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். அவர் தன் பணியில் நடந்த ஒரு சம்பவத்தால் ஊனமுற்றவராகி விடுகிறார். அதனால் பணியைவிட்டுப் போய் விடுகிறார் .ஐந்தாண்டுகள் ஓடி விடுகின்றன. அதற்குப் பிறகு ஒரு பொறி தட்டுகிறது. அன்று, தான் செய்த புலனாய்வு விசாரணையை மறுபடியும் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றவே காட்சிகள் விரிகின்றன. அவைதான் 16 மணி நேரம் நடப்பவை. காதல் காட்சிகளோ, பாடல்களோ கிடையாது. திரைக்கதைக்கு தேவையில்லாத எந்த அம்சமும் படத்தில் கிடையாது. கதை களம் கோவை. 23 நாளில் படத்தை எடுத்து முடித்துவிட்டோம் என்கிறார் இயக்குநர் கார்த்திக்.