விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கதை தேடல் நடந்தது. இறுதியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் கூறிய ஆட்டோ ஜானி படத்தில் சிரஞ்சீவி நடிக்க சம்மதம் தெரிவித்தார். வேலைகள் துவங்க இருந்த நேரத்தில் அட்டோ ஜானி படத்தின் இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யுமாறு சிரஞ்சீவி இயக்குனரிடம் கூறினார். ஜெகன்நாத் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு திருப்பி தரததால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர் ஆட்டோ ஜானி படத்தில் ரவி தேஜா நடிப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது விஜய் நடித்த கத்தி திரைப்படம் கத்திலான்டோடு என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் முற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றது. இந்நிலையில் சிரஞ்சீவியின் 151வது திரைப்படமாக ஆட்டோ ஜானி படத்தை உருவாக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் திட்டமிட்டுள்ளாராம். இரண்டாம் பாதியை முழுவதுமாக மாற்றி அமைத்துள்ள ஜெகன்நாத் சிரஞ்சீவியைச் சந்திக்க முயற்சி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது கல்யாண் ராம் நடிப்பில் ஐஎஸெஎம் எனும் படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிவருகின்றார்.