ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஹன்சிகாவுக்கு நடிகை என்பதை தாண்டி இரண்டு வேறு முகங்கள் உண்டு. ஒன்று அவர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் தாய். இன்னொரு முகம் அவர் ஒரு சிறந்த ஓவியர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஓவியப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறார். இப்போதும் நேரம் கிடைக்கும்போது ஓவியங்கள் வரைந்து வருகிறார். பெரும்பாலும் கடவுள் ஓவியங்களையே அதிகம் வரைவார். அதிலும் கிருஷ்ணன் ஓவியங்களை விதவிதமாக வரைந்து வைத்திருக்கிறார்.
ஹன்சிகாவின் ஓவியங்கள் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகி இருக்கிறது. தற்போது அவர் தான் வரைந்திருக்கும் ஓவியங்களை கொண்ட, கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தன் குழந்தைகள் வளர்ப்பிற்கு செலவிட இருக்கிறார்.
"நான் வரைந்த ஓவியங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து சென்னையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறேன். இதுவரை எனக்கு அப்படி ஒரு யோசனை இல்லாமல் இருந்தது. எனது ஓவியங்களைப் பார்த்த நெருக்கமான தோழிகள் இந்த யோசனையைச் சொன்னார்கள். அதனால் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்" என்கிறார் ஹன்சிகா.