ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கத் திரையுலகத்தில் ஒரே நேரத்தில் தயாராகி வந்த சரித்திரப் படங்களான 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களில் 'பாகுபலி' படம் ஜுலை மாதம் 10ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது. அதற்கு முன்னதாகவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'ருத்ரமாதேவி' படம் சுமார் மூன்று மாதங்கள் கழித்து கடந்த வாரம் 9ம் தேதியன்று வெளியானது. தெலுங்கு மொழியில் நேரடியாகவும் மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியான இந்தப் படத்தின் முதல் வார வசூல் நன்றாக இருந்ததாகவே டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில பல குறைகள் படத்தில் இருந்தாலும் ரசிகர்கள் அவற்றைப் பெரிது படுத்தாமல் இயக்குனர் குணசேகரின் கடின உழைப்பிற்கும், அனுஷ்காவின் ஈடுபாட்டான நடிப்பிற்கும், அல்லு அர்ஜுனின் அதிரடியான நடிப்பிற்கும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தெலுங்கானா மாநிலத்தில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகின் பல இயக்குனர்கள், நட்சத்திரங்கள் இப்படம் பற்றிப் பேசுவதும் படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்து முதல் வார வசூலில் முத்திரை பதித்துள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டும் 20 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம். மற்ற மாநிலங்களில் சுமார் 9 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் சுமார் 6 கோடி ரூபாய் என முதல் வாரத்தில் சுமார் 35 கோடி வரை வசூலித்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் ஆரம்பமான வார நாட்களிலும் இப்படத்தின் வசூல் திருப்திகரமாகவே உள்ளதாம். 'பாகுபலி' அளவிற்கு இல்லையென்றாலும் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தாது என்றே சொல்கிறார்கள்.
தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் வரும் 16ம் தேதி வெளியாக உள்ளது.