ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றியால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்த மகிழ்ச்சியுடன் தனது அடுத்தபட வேலைகளில் இறங்கியவருக்கு சமீபத்தில் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து டில்லி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்றார். தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தனது அடுத்தப்பட வேலைகளில் பரபரப்பாக செயல்பட துவங்கியிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தனது அடுத்தப்படத்தை இயக்குகிறார். இதில் தெலுங்கு ஸ்டார்கள் நாகர்ஜூனா, மகேஷ் பாபு ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அவர்களுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா, நாகர்ஜூனாவுக்கு ஜோடியாகவும், ஸ்ருதி-மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்கள். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மணிரத்னத்தின் அடுத்தபடத்தில் ஐஸ்வர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுப்பற்றி ஐஸ்வர்யா ராய் கூறியிருப்பதாவது, கடந்தாண்டே மணிரத்னத்தில் படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. பொதுவாக நான் குறிப்பிட்ட ஒரு இயக்குநர் மற்றும் ஹீரோ படங்களில் நடிக்க விரும்புவதில்லை, ஆனால் மணிரத்னம் படத்தில் எப்போதும் வேண்டுமானால் நடிப்பேன். என்னை சினிமாவில் அறிமுகம் செய்ததே அவர் தான். எனது ரீ-என்ட்ரி அவருடைய படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது முடியவில்லை. சமீபத்தில் மணிரத்னம் என்னிடம் பேசினார். ஏற்கனவே என்னிடம் சொன்ன கதையை மீண்டும் இயக்க போகிறார், நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.