ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலையில் மிளகாய் அரைப்பது என்று சொல்வார்களே... அப்படி ஒரு மிளகாய் அரைத்தல் வேலையைத்தான் சத்தமில்லாமல் பார்த்திருக்கிறார் சரவணன். எந்த சரவணன்?
எங்கேயும்.. எப்போதும்..., இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது ஜெய்யை வைத்து வலியவன் என்ற படத்தை இயக்கி உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால், இரண்டாவதாக இயக்கிய இவன் வேற மாதிரி படம் மிகப்பெரிய தோல்விப்படம்.
இவன் வேற மாதிரி படம் தோல்வியடைந்த காரணத்தினால் சரவணனின் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், அவருக்கு கை கொடுத்தார் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சம்பத் என்பவர். அதாவது சரவணனை வைத்து படம் தயாரிக்க முன் வந்தார். வலியவன் கதையைச் சொன்ன சரவணன் 8 கோடிக்குள் படத்தை முடித்துக்கொடுப்பதாக சொன்னதை நம்பி பணத்தைப் போட்டார் தயாரிப்பாளர். படம் வளர ஆரம்பித்ததும் பட்ஜெட்டும் எகிறியது. படம் முடிந்தபோது 18 கோடி செலவாகி இருந்தது. இந்த 18 கோடியில் ஜெய்யுக்கும், சரவணனுக்கும் சம்பளம் சில கோடியாம். வலியவன் படம் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கிறது.