ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் படம் என்றால் வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கும். அவர் நடித்த படங்கள் உடனடியாக வெளிவராது... இழுத்துக் கொண்டே போகும்.
என்றெல்லாம் படத்துறையிலேயே பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த விமர்சனம் விக்ரம் காதுக்கும் வந்துவிட்டது போலும். எனவே ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இனி இடைவெளியே கொடுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதன் காரணமாக தற்போது 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வரம் விக்ரம் அந்தப்படத்தை முடித்த உடனே ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
ஒரு படத்தை கௌம் மேனன் இயக்குகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். விக்ரம் பிரபுவை வைத்து அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப்படத்தை இயக்குகிறார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.
கௌதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. இரண்டு படங்களுக்கும் தலா 10 நாட்கள் கால்ஷீட் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இரண்டில் ஒரு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறாராம் விக்ரம்.