ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கில் தயாராகி தமிழிலும் வெளிவர உள்ள 'பாகுபலி' படமும், ஆர்யாவுடன் நடித்து வரும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படமும் வெளிவந்தால் தமன்னா மீண்டும் தமிழ்த் திரையுலகில் கண்டிப்பாக வலம் வருவார் என்கிறார்கள். 'கல்லூரி' படத்திற்குப் பிறகு மிக வேகமாக தமிழ் சினிமாவில் முன்னேறி வந்த தமன்னாவிற்கு அதன் பிறகு வந்த காதல் வதந்திகளே அவருடைய தமிழ்த் திரையுலக வாழ்க்கைக்கு தடைக் கற்களாக அமைந்தன. கடந்த ஆண்டு வெளிவந்த 'வீரம்' படத்தால் மீண்டும் தமிழ்த் திரையுலகத்திற்குள் நுழைந்தார்.
தமன்னாவின் நிறமும் அவருடைய நடிப்பும் தமிழ் ரசிகர்களை நிறையவே கவர்ந்தது. தமன்னாவை கிளாமரான உடையில் இதுவரை நாம் பார்த்திருக்கலாமே தவிர, ஆபாசமான உடைகளில் அவரை பார்த்திருக்க முடியாது. சினிமாவுக்கு வரும் முன்னே அப்படி ஒரு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாராம் தமன்னா. “முத்தக் காட்சிகளில் ஒரு போதும் நடிக்க மாட்டேன். அதே போல் பிகினி உடையில் நடிக்கவும் மாட்டேன். அப்படி ஒரு எண்ணத்துடன்தான் திரையுலகிற்கு வந்தேன். அதை இன்று வரை கடை பிடித்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக அதிலிருந்து மாறாமலிருக்கிறேன்,” என்கிறார்.
ஆனால், 'பையா' படத்தில் 'அடடா மழைடா...' பாடலில் அவர் ஆடிய ஆட்டமும், போட்ட உடையுமே அவருடைய கட்டுப்பாட்டை காற்றில் பறக்க வைத்து விட்டதே என்றும் சிலர் சொல்கிறார்கள்.