விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்குள்ள ராமோஜி பிலிம் சிட்டி, அன்னபூர்ணா ஸ்டுடியோ மற்றும் ஐதராபாத்தில் உள்ள சில இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்றுடன் ஐதராபாத் ஷெட்டியூல் முடிவடைந்து படக்குழுவினர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அநேகமாக அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
'லிங்கா' படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாகி, அங்கு சில நாட்கள் நடைபெற்று, பின்னர் அப்படியே ஐதராபாத்திற்குச் சென்றுவிட்டது. ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு, அதுவும் ரஜினிகாந்த் நடிக்கும் படம், தமிழ்நாட்டில் படமாகாமல் தொடர்ந்து வேறு மாநிலங்களிலேயே படமாக்கப்பட்டு வருவது இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது. அந்தக் குறையைப் போக்குவதற்காக அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதென முடிவெடுத்துள்ளார்கள் எனச் சொல்லப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாலும், ரஜினியுடன் முதன் முறையாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாலும் படத்திற்கு வழக்கம் போலவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.