மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப் படங்களை விட தெலுங்கப் படங்கள்தான் ஒரு மார்க்கெட் அந்தஸ்தைக் கொடுத்தன. தமிழில் அவர் நடித்த '3, 7ம் அறிவு' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் நடித்த 'கப்பார் சிங்' படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தொடர்ச்சியாக நல்ல வெற்றியையும், தெலுங்கத் திரையுலகில் முன்னணி நடிகை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தன. சமீபத்தில் வெளிவந்த 'ரேஸ் குர்ரம்' படம் வரை ஸ்ருதியின் தெலுங்கு மார்க்கெட் ஸ்டடியாகவே உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக தெலுங்கில் புதுப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம்.
தற்போது மகேஷ் பாபுவுடன் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே சமயம் தமிழில் விஷாலுடன் 'பூஜை' படத்தில் நடித்து வருகிறார்., விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். அதோடு நான்கைந்து ஹிந்திப் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படங்களில் நடிக்க ஒப்பந்தமானதும், அவர் தெலுங்குத் திரையுலகை கண்டு கொள்ளவில்லை என அங்குள்ளவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம். ஆனாலும், ஸ்ருதிஹாசன் தமிழ்த் திரையுலகிலும் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ளார் என இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.